AI கார்களால் இந்த ஆபத்து உள்ளது- ஐ.நா கூறும் அதிர்ச்சி தகவல்
16 ஆனி 2025 திங்கள் 19:51 | பார்வைகள் : 3103
AI உதவியுடன் இயக்கப்படும் கார்களை பயங்கரவாதிகளால் ஹேக் செய்யப்படும் ஆபத்து உள்ளது என ஐ.நா எச்சரித்துள்ளது.
பயங்கரவாதக் குழுக்கள் தனிநபர்களை குறிவைக்க, முக அங்கீகார மென்பொருளைப் பயன்படுத்தலாம் அல்லது ஆளில்லா வான்வழி வாகனங்களைப் பயன்படுத்தி 'திரள்' தாக்குதல்களை நடத்தலாம் மற்றும் பாதுகாப்புகளை முறியடிக்கலாம் என்ற கவலைகள் அதிகரித்தன.
அதேபோல், தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக AI உதவியால் இயக்கப்படும் கார்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்த வகை கார்களை பயங்கரவாதிகள் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்த Algorithms மற்றும் Terrorism என்ற அறிக்கையில், 'பயங்கரவாத நோக்கங்களுக்காக செயற்கை நுண்ணறிவின் தீங்கிழைக்கும் பயன்பாடு என்ற தலைப்பிலான அறிக்கை, போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பில் AIயின் அதிகரித்து வரும் பங்கை ஹேக் செய்து குழப்பத்தை ஏற்படுத்தலாம்' என எச்சரிக்கிறது.
இதனை குறிப்பிட்டு ஐ.நாவும் தொழில்நுட்பத்தில் வரம்புகளை விதிக்க அவசர சர்வதேச நடவடிக்கைக்கு ஐ.நா இப்போது அழைப்பு விடுத்துள்ளது.
சர்வதேச காவல் மற்றும் பொது பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் வில்லியம் ஆல்க்கோர்ன் கூறுகையில், "பிரித்தானியாவின் பாதுகாப்பு சேவைகள் மற்றும் காவல்துறை AI-யினால் இயக்கப்படும் தாக்குதலுக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என கூறினார்.
விமர்சகர்கள் சிலர், முழுமையான குறியாக்கத்தின் விரைவான பெருக்கம் மற்றும் பெயர் குறிப்பிடாத கருவிகளின் கிடைக்கும் தன்மை ஆகியவை, பயங்கரவாதிகள் கண்டறியப்படாமல் தொடர்பு கொள்ள அனுமதிக்கின்றன என்று எச்சரிக்கின்றனர்.
எனினும், பயங்கரவாத எதிர்ப்புக்கு AI வழங்கும் நன்மைகளையும் ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan