Paristamil Navigation Paristamil advert login

ஓட்டுநர் பரிசோதகர்களின் பற்றாக்குறை: தேர்வுக்காக காத்திருப்பு!

ஓட்டுநர் பரிசோதகர்களின் பற்றாக்குறை: தேர்வுக்காக காத்திருப்பு!

13 வைகாசி 2025 செவ்வாய் 13:54 | பார்வைகள் : 5905


Hauts-de-Seine மாவட்டத்தில், ஓட்டுநர் பரிசோதகர்களின் பற்றாக்குறை காரணமாக தேர்வு திகதிகளை பெறுவதற்காக ஓட்டுநர் பயிற்சி பெறும் மாணவர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இந்த சூழ்நிலையை எதிர்த்து, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பெறும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரசு வாக்குறுதியளித்தபடியே பரிசோதகர்களை தற்போது பணியில் சேர்த்துள்ளது.

இந்த புதிய பரிசோதகர்களால், தேர்வு திகதிளுக்கான காத்திருப்பு காலம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டுநர் பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கும் இடையிலான சேவையில் முன்னேற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது.