Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவின் பாரிய விபத்து - 7 பொலிஸாருக்கு காயம்! 2 பேர் கைது

பிரித்தானியாவின் பாரிய விபத்து - 7 பொலிஸாருக்கு காயம்! 2 பேர் கைது

10 சித்திரை 2025 வியாழன் 04:02 | பார்வைகள் : 1231


பிரித்தானியாவில் பொலிஸ் வாகனங்கள் சம்பந்தப்பட்ட பாரிய விபத்தைத் தொடர்ந்து A1 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் டைன்சைட்(Tyneside) அருகில் A1 நெடுஞ்சாலையில் 5 பொலிஸ் வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு பாரிய விபத்து காரணமாக, இரு திசைகளிலும் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

 இந்த விபத்தில் ஏழு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நியூகாஸில் அருகே டென்டனில் உள்ள A1 நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிய பாதையில் நிகழ்ந்துள்ளது.

காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் நான்கு பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்னும் இரு அதிகாரிகள் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர், அவர்களில் ஒருவர் கால் காயத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் சிக்கிய மற்ற வாகனமான BMW M ஸ்போர்ட் காரில் இருந்த இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

பொலிஸார், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி பலத்த காயம் ஏற்படுத்தியதாக கூறி 20 வயது மதிக்கத்தக்க ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலும், ஆபத்தான வாகன ஓட்டலுக்கு உடந்தையாக இருந்ததாக அதே வயதைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்