Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

புளோரிடா படகு விபத்து: தப்பி ஓடிய படகு! ஒருவர் பலி

புளோரிடா படகு விபத்து: தப்பி ஓடிய படகு! ஒருவர் பலி

28 சித்திரை 2025 திங்கள் 06:19 | பார்வைகள் : 7221


மெமோரியல் காஸ்வே பாலம் அருகே நிகழ்ந்த படகு விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் நேற்றிரவு நினைவு காஸ்வே பாலம் அருகே நிகழ்ந்த படகு விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர் என்று கிளியர்வாட்டர் பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மீது அடையாளம் தெரியாத ஒரு வேகமாக வந்த படகு மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் அந்தப் படகு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த படகு விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் பயணிகள் படகில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், படுகாயமடைந்த இருவரை ஹெலிகாப்டர் மூலம் அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சில மணி நேரங்களுக்கு பிறகு வெளியான அதிகாரப்பூர்வ தகவலில், இந்த படகு விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.

தப்பிச் சென்ற அந்த மர்ம படகை மற்றொரு சட்ட அமலாக்க அமைப்பு தற்போது அடையாளம் கண்டுள்ளதாக கிளியர்வாட்டர் பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.

இந்த கோர விபத்து குறித்து புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் (Florida Fish and Wildlife Conservation Commission) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்