திருநங்கைகள் தொடர்பில் பிரித்தானிய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
17 சித்திரை 2025 வியாழன் 17:12 | பார்வைகள் : 4270
பிரித்தானியாவின் சமத்துவ சட்டத்தின் கீழ் திருநங்கைகள் பெண்கள் சட்ட வரையறைக்குள் வர மாட்டார்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரித்தானிய உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை புதன்கிழமை வழங்கியுள்ளது.
2010-ஆம் ஆண்டு சமத்துவச் சட்டத்தின் படி, ஒரு பெண்ணின் சட்ட வரையறை உயிரியல் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு, பாலின மாற்றம் செய்த பெண்கள் (trans women) சட்டப்படி பெண்கள் என கருதப்படமாட்டார்கள் எனக் கூறுகிறது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, திருநங்கைகளின் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்பவர்களுக்கு மிகப்பாரிய அடியாக கருதப்படுகிறது.
இந்தத் தீர்ப்பில் சம்பந்தப்பட்ட ஐந்து நீதிபதிகள், திருநங்கைகள் பெண்களா என்பது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்பதை வலியுறுத்தியுள்ளனர். மேலும், பாலினம் அல்லது பாலினத்தின் அர்த்தத்தை தீர்ப்பது நீதிமன்றத்தின் பங்கு அல்ல என்று கூறியுள்ளனர்.
இது 2010 சமத்துவச் சட்டம் குறித்த தீர்ப்பு மட்டும்தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது மருத்துவமனைகள், பாலியல் வன்கொடுமை முகாம்கள், விளையாட்டு கழகங்கள் போன்ற இடங்களில் ஒரே பாலின சேவைகளை வழங்குவது குறித்த குழப்பங்களை தெளிவுபடுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், trans நபர்கள் மீதான வேறுபாடுகளுக்கும் பாதுகாப்புகள் தொடரும், ஆனால் அது “gender reassignment” எனும் பாதுகாக்கப்படும் தன்மை கீழ் வழங்கப்படும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு, பெண்கள் மற்றும் trans சமூகத்தின் உரிமைகள் இடையே உள்ள மோதலுக்கு ஒரு சட்ட அடிப்படை விளக்கம் வழங்குகிறது. எனினும், இது எதிர்காலத்தில் சட்ட, சமூக மற்றும் அரசியல் விவாதங்களைத் தூண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan