பரிசுக்கு வருகிறது இளையராஜா சிம்பொனி! - திகதியை அறிவித்தார்!!
10 பங்குனி 2025 திங்கள் 08:09 | பார்வைகள் : 7956
இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசைப்பிரவாகம் விரைவில் பிரான்ஸ் தலைநகர் பரிசில் இடம்பெற உள்ளது. அதன் திகதியை இளையராஜா அறிவித்துள்ளார்.
”Valiant” என பெயரிடப்பட்ட அவரது சிம்பொனி இசை நிகழ்ச்சி மார்ச் 8 ஆம் திகதி இலண்டனில் இடம்பெற்றது. அதனை முடித்துக்கு இன்று திங்கட்கிழமை அதிகாலை இளையராஜா சென்னை திரும்பினார். அங்கு வைத்து ஊடகவியலாளர்களைச் சந்தித்த இளையராஜா, இந்த சிம்பொனி நிகழ்ச்சி, 13 நாடுகளில் இடம்பெற உள்ளது என தெரிவித்தார்.
“இந்த சிம்பொனி இசையை ஒலிப்பதிவு செய்தோ, வீடியோக்களாகவோ கேட்கக்கூடாது. அதனை அந்த அரங்கில் இருந்து நேரடியாக கேட்டு மகிழவேண்டும். அதன் உணர்வுகள் நேரடியாக கடத்தப்படவேண்டும்” என தெரிவித்த அவர், பிரான்ஸ் தலைநகர் பரிசில் எதிர்வரும்
செப்டம்பர் 6 ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan