டிரம்ப் உடன் மோடி போனில் பேச்சு; உலக அமைதிக்காக இணைந்து செயல்பட உறுதி
28 தை 2025 செவ்வாய் 04:26 | பார்வைகள் : 10438
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன், பிரதமர் மோடி போனில் பேசி, அவர் இரண்டாம் முறை அதிபராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக, டிரம்ப் இரண்டாம் முறை பதவியேற்று, பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில், அவருடன் பிரதமர் மோடி இன்று போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:
எனது நெருங்கிய நண்பரான அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் போனில் பேசினேன். இரண்டாம் முறை அவர் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். இரு தரப்புக்கும் பயன் தரக்கூடிய, நம்பிக்கைக்குரிய பங்குதாரராக இருவரும் சேர்ந்து செயல்படுவோம் என்று உறுதி அளித்தேன். நமது நாட்டு மக்கள் நலனுக்காகவும், உலக அமைதி, வளம், பாதுகாப்புக்காக இணைந்து செயல்படுவோம்
இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan