Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு

கனடாவில் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு

27 தை 2025 திங்கள் 14:27 | பார்வைகள் : 6131


கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சில பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக ஒன்றாரியோ மாகாணத்தின் தென்பகுதியில் இவ்வாறு பலத்த காற்று வீசும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று பகல் முதல் இரவு வரையில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்படுகிறது.

மணிக்கு 70 கிலோமீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரை வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்படுகிறது.


மரங்கள் முறிந்து விழக்கூடும் எனவும் மின்சாரம் தடைப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.