பிரித்தானியாவில் வணிக வளாகத்திற்கு அருகே மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
4 பங்குனி 2025 செவ்வாய் 10:03 | பார்வைகள் : 4814
பிரித்தானியாவில் வணிக வளாகத்திற்கு அருகே மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் Stoke-on-Trent பகுதியில் பரபரப்பான வணிக வளாகத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் பொதுமக்களில் ஒருவர் மனித எலும்புக்கூடுகளை கண்டெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த கண்டுபிடிப்பு குறித்து சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது.
எட்ரூரியாவில்(Etruria) உள்ள ஃபெஸ்டிவல் பூங்காவிற்கு(Festival Park) அருகில் உள்ள இடத்தில் ஸ்டாஃபோர்ட்ஷயர்(Staffordshire) காவல்துறை சுமார் 3:40 மணிக்கு சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், "கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் மனிதனுடையது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
முறையாக அடையாளம் காணப்படவில்லை" என்று தெரிவித்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan