பரிஸ் : 14 ஆம் வட்டாரத்தில் தீ... ஒருவர் பலி!

12 மாசி 2025 புதன் 13:29 | பார்வைகள் : 10074
பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவியதில், ஒருவர் பலியாகியுள்ளார்.
பெப்ரவரி 11, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. rue Alfred-Durand வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் மாலை 7.30 மணி அளவில் திடீரென தீ பரவியுள்ளது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ அணைக்கப்படுவதற்கு முன்னரே நிலமை கட்டுப்பாட்டை மீறி வேகமாக பரவியுள்ளது.
பின்னர் இரவு 9 மணி அளவிலேயே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. வீட்டில் இருந்து வயது குறிப்பிடப்படாத ஒருவரது சடலத்தை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர்.
ஐந்தாவது தளத்தில் தீ பரவியதை அடுத்து, அந்த தளத்தில் வசிக்கும் அனைவரும் வெளியேற்றப்பட்டு, உடற்பயிற்சி கூடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1