Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

காதல் பிரிவில் பெண்களை விட ஆண்கள் ஏன் வலியை அதிகமாக உணர்கிறார்கள்?

 காதல் பிரிவில் பெண்களை விட ஆண்கள் ஏன் வலியை அதிகமாக உணர்கிறார்கள்?

11 மாசி 2025 செவ்வாய் 13:52 | பார்வைகள் : 7843


காதலில் பிரேக்அப் என்பது மிகவும் வலியை தரக்கூடியது. காதலில் திடீரென அல்லது ஒருதலைப்பட்சமான பிரிவின் போது, பெண்களை விட ஆண்கள் பெரும்பாலும் மனவேதனையை அதிகமாக அனுபவிக்கிறார்கள்.

 இத்தகைய திடீர் அல்லது எதிர்பாராத பிரிவினை ஆண்களை கைவிடப்பட்டவர்களாகவும், குழப்பமடைந்தவர்களாகவும், உணர்ச்சி ரீதியாக அதிகமாக உணர வைக்கும். ஆண்கள் வெளியில் வலுவாகத் தோன்றினாலும், பெண்களைப் போலவே தான் அவர்களும் உணர்ச்சிகளை அனுபவிக்கிறார்கள். ஒரு உறவின் பிரிவைச் சமாளிப்பது அவர்களுக்கு கடினமாக்கலாம் மற்றும் குணப்படுத்தும் செயல்முறையை தாமதப்படுத்தலாம்.

 பிரேக்கப் குறித்து வெளிப்படையாக பேச பெண்களுக்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. ஆனால், ஆண்களைப் பொறுத்தவரை, இந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதால் பலவீனமானவர்கள் என்று முத்திரை குத்தப்படுவதற்கு வழிவகுக்கிறது. இது வருத்ததக்கது. ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, குடிப்பழக்கம் அல்லது சாதாரண சண்டைகள் போன்ற ஆரோக்கியமற்ற சமாளிக்கும் வழிமுறைகளை நாட அதிக வாய்ப்புள்ளது. காதல் பிரிவால் ஆண்கள் அதிகமாக பாதிக்கப்படுவதற்கு பல காரணிகள் பங்களிக்கின்றன.

 உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிரமம்: ஆண்கள் பெரும்பாலும் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படையாகப் பேசுவதற்குப் பழக்கமில்லாதவர்கள். இதுபோன்ற சூழ்நிலையில் பெண்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் அரவணைப்பை நாடலாம். ஆனால் ஆண்கள் தங்கள் உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே மறைத்துக்கொள்கிறார்கள். இப்படி தங்கள் உணர்ச்சிகளை வெளியே கொட்டாததால் பிரிவின் வலியை இன்னும் தீவிரமாக உணர்கிறார்கள்.

 பலவீனமான ஆதரவு அமைப்புகள்: பெண்களைப் போல், ஆண்களுக்கு பிரிவின் வலியைப் பகிர்ந்துகொள்ள நெருங்கிய நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் காதல் பிரிவிற்குப் பிறகு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரலாம். இதிலிருந்து மீள்வதற்கு தேவையான ஆதரவுக்கரம் இல்லாமல் இருக்கலாம்.

 அடையாள இழப்பு: பல ஆண்களுக்கு, ஒரு உறவின் பிரிவு என்பது ஒரு துணையை இழப்பது மட்டுமல்ல; தங்களில் ஒரு பகுதியை இழப்பது போலவும் உணரலாம். இது வெறுமை உணர்வை ஏற்படுத்தும். ஏனெனில் அவர்கள் தங்கள் சுய மதிப்பு உணர்வை மீண்டும் பெறுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க போராடுகிறார்கள்.

 சமூக எதிர்பார்ப்புகள்: சமூகம் பெரும்பாலும் ஆண்களை வலுவானவர்களாகவும், தங்கள் உணர்ச்சிகளை சுதந்திரமாகக் கையாளவும் கட்டாயப்படுத்துகிறது. இந்தக் கலாச்சார எதிர்பார்ப்பு, கடினமான காலங்களில் உதவி கேட்க ஆண்களைத் தயங்கச் செய்யலாம். இது அவர்களின் குணமடையும் திறனைத் தடுக்க வாய்ப்புள்ளது.

 தொடர்பு கொள்ளுதல்: சில சந்தர்ப்பங்களில், ஒரு ஆண் தனது முன்னாள் காதலியுடன் தொடர்பைப் பேண முயற்சி செய்யலாம். இது மீண்டும் உறவை புதுப்பிக்க அல்ல; மாறாக தனது உணர்ச்சி துயரத்தைச் சமாளிப்பதற்காகவே இருக்கும். இது ஒருவர் தனது தொடர்பைத் தவறவிட்டு, உறவின் பிரிவை தாங்க முடியாமல் போராடுகிறார் என்பதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் போதுமான ஆதரவு அமைப்புகள் இல்லாததால், பிரேக்அப்கள் ஆண்களை ஆழமாகப் பாதிக்கலாம். மேலும் அவர்களின் உணர்ச்சிபூர்வமான செயல்கள் பெண்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன. பெண்களைப் போலவே ஆண்களும் தங்கள் உணர்வுகளைச் செயல்படுத்தவும், காதல் பிரிவிலிருந்து மீள நேரமும் இடமும் தேவை என்பதை அங்கீகரிப்பது முக்கியம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்