மக்கள் கூட்டத்தினர் மீது விழுந்த இரும்பு தட்டு.. - 13 பேர் காயம்!!

1 மார்கழி 2024 ஞாயிறு 07:44 | பார்வைகள் : 5326
கிறிஸ்மஸ் சோடனைக்காக வாகனம் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட பாரிய அளவுடைய இரும்புத்தட்டு ஒன்று மக்கள் கூட்டத்தினர் மீது விழுந்ததில், 13 பேர் காயமடைந்துள்ளனர்.
நவம்பர் 30 சனிக்கிழமை இச்சம்பவம் Trouville-sur-Mer (Calvados) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Place du Maréchal Foch பகுதியில் இரும்பிலான இராட்சத பறவை ஒன்றை அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார்கள். அதன் ஒரு பகுதியான இரும்பு தட்டே விழுந்துள்ளது. இரவு 7 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், இதில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்து அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025