Seine-et-Marne : பாரிய வெடிப்பு சம்பவம்.. பெண் பலி!!
28 கார்த்திகை 2024 வியாழன் 12:43 | பார்வைகள் : 7062
Seine-et-Marne மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்றில் 30 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
நவம்பர் 27, புதன்கிழமை காலை 5 மணிக்கு Saint-Loup-de-Naud நகரில் உள்ள வீடொன்று திடீரென பாரிய சத்தத்துடன் வெடித்து, இடிந்து விழுந்துள்ளது. இச்சம்பவம் உடனடியாக அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அங்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.
60 வரையான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு, கட்டிட இடிபாடுக்குள் சிக்கிய பெண் ஒருவரை மீட்டெடுத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 1993 ஆம் ஆண்டு பிறந்த 31 வயதுடையவர் என அறிய முடிகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan