இலங்கையில் 8 மில்லியன் பெறுமதியான அம்பருடன் இருவர் கைது
24 கார்த்திகை 2024 ஞாயிறு 16:11 | பார்வைகள் : 5836
அனுராதபுரத்தில் சுமார் 8 மில்லியன் பெறுமதியான திமிங்கலங்களில் இருந்து பெறப்பட்ட பெறுமதியான அம்பர்களை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த இருவரை நொச்சியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் நொச்சியாகம பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து நேற்று முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த அம்பர் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் சுமார் 8 மில்லியன் பெறுமதியான ஒரு கிலோ கிராம் அம்பர் வைத்திருந்தனர்.
தங்கால்லை பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரும், கலென்பிந்துனுவெவ கொக்கவெவ பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய ஒருவரும், போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan