பரிசின் அழைப்பை ஏற்கவில்லை... பிரெஞ்சு தீவுக்குச் செல்லும் பாப்பரசர்!!
23 கார்த்திகை 2024 சனி 16:59 | பார்வைகள் : 15853
நோர்து-டேம் தேவாலயத்தின் திறப்பு விழா டிசம்பர் 7 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இந்த திறப்புவிழாவில் பங்கேற்க பாப்பரசர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த அழைப்பை அவர் ஏற்க மறுத்திருந்தார். இந்நிலையில், பிரெஞ்சுத் தீவான Corse
இற்கு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பயணிக்க உள்ளதாக வாட்டிக்கன் தெரிவிக்கிறது.
Corse தீவில் வசிப்பவர்களில் 90% சதவீதமானவர்கள் கத்தோலிக்க மதத்தை பிற்பற்றுபவர்களாவர். அவர்களை சந்திப்பதுடன், இரண்டு இடங்களில் அவர் உரையாற்றவும் உள்ளார்.
அதற்கு முன்னதாக Ajaccio விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பாப்பரசரைச் சந்திக்கிறார்.
பாப்பரசரின் இந்த வருகைக்காக பிரெஞ்சு அரசு €2 மில்லியன் யூரோக்கள் செலவிடுகிறமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan