33,000 வீடுகளுக்கு இரண்டாவது நாளாக மின் தடை!!
23 கார்த்திகை 2024 சனி 16:00 | பார்வைகள் : 12940
பிரான்சை சூறையாடிச் சென்ற Caetano புயலினால், 270,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டிருந்தது. அவற்றில் 85% சதவீதமான வீடுகளுக்கு மின்சாரம் மீள வழங்கப்பட்டுள்ளதாக மின் வழங்குனர்களான Enedis நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று சனிக்கிழமை காலை முதல் தற்போது வரை 45,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இன்னும் 33,000 வீடுகளுக்கு இரண்டாவது நாளாக மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மின் இணைப்பை வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Normandy மாவட்டத்தில் 15,500 வீடுகளுக்கும், Pays de la Loire மாவட்டத்தில் 12,000 வீடுகளுக்கும் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan