33,000 வீடுகளுக்கு இரண்டாவது நாளாக மின் தடை!!

33,000 வீடுகளுக்கு இரண்டாவது நாளாக மின் தடை!!

23 கார்த்திகை 2024 சனி 16:00 | பார்வைகள் : 13180


பிரான்சை சூறையாடிச் சென்ற Caetano புயலினால், 270,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டிருந்தது. அவற்றில் 85% சதவீதமான வீடுகளுக்கு மின்சாரம் மீள வழங்கப்பட்டுள்ளதாக மின் வழங்குனர்களான Enedis நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று சனிக்கிழமை காலை முதல் தற்போது வரை 45,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இன்னும் 33,000 வீடுகளுக்கு இரண்டாவது நாளாக மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மின் இணைப்பை வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Normandy மாவட்டத்தில் 15,500 வீடுகளுக்கும்,   Pays de la Loire மாவட்டத்தில் 12,000 வீடுகளுக்கும் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க