Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்தில் கோர விபத்து - ஒருவர் பலி

சுவிட்சர்லாந்தில் கோர விபத்து - ஒருவர் பலி

21 கார்த்திகை 2024 வியாழன் 08:58 | பார்வைகள் : 6299


சுவிட்சர்லாந்தில் உள்ள வலே மாநிலத்தில்  வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் உயிரிழந்திருப்பதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து சம்பவம் 19 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன் குறித்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சீடஸ் (Siders) லோயூக் (Leuk) பிரதான வீதியில் உள்ள ஃபைன்ஸ்ட் (Pfynstrasse) வீதியில் இன்று பார ஊர்தியுடன் மோதி இடம்பெற்ற இவ்விபத்தில் மேலும் இரு வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலே மாநில பொலிஸாருடன், வலாய்ஸ் மீட்பு பிரிவு, லோயூக் பிராந்திய தீயணைப்பு பிரிவு, லோயூக் – லோயூக்பாட் பிராந்திய பொலிஸார் மற்றும் பெர்ன் மாநில பொலிஸ் விபத்து சேவை ஆகியவை மீட்பு பணியில் இருந்துள்ளன.

இந்த விபத்தினால் சுமார் ஒரு மணியத்தியாலத்திற்கு மேலாக இவ்வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.


 

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்