நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இலங்கை! 12 ஆண்டுகளுக்கு பின் முத்திரை பதிப்பு
18 கார்த்திகை 2024 திங்கள் 08:45 | பார்வைகள் : 7273
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பல்லேகேலேவில் நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 209 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மார்க் சாப்மேன் 76 (81) ஓட்டங்களும், மிட்ச் ஹே 49 (62) ஓட்டங்களும் எடுத்தனர். தீக்ஷணா, வாண்டர்சே தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ 5 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து நிசங்கா 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, கமிந்து மெண்டிஸ் டக்அவுட் ஆனார்.
குசால் மெண்டிஸ் (Kusal Mendis) மட்டும் நங்கூரம் போல் நின்று ஆட, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. 8வது விக்கெட்டுக்கு தீக்ஷணாவுடன் கைகோர்த்த மெண்டிஸ் அணியை வெற்றி பெற வைத்தார்.
இலங்கை அணி 46 ஓவரில் 210 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. குசால் மெண்டிஸ் 74 (102) ஓட்டங்களும், தீக்ஷணா 27 (44) ஓட்டங்களும் எடுத்தனர்.
இதன்மூலம் இலங்கை அணி 12 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan