இரண்டு நாட்களில் 900 அகதிகள் கடற்பயணம்!

15 மார்கழி 2024 ஞாயிறு 08:58 | பார்வைகள் : 10116
இரண்டு நாட்களில் 900 இற்கும் மேற்பட்ட அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் (48 மணிநேரத்தில்) 907 அகதிகள் படகுகளில் பிரித்தானியா நோக்கி பயணித்ததாகவும், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் பிரித்தானியாவின் Home Office அறிவித்துள்ளது.
சராசரியாக படகு ஒன்றுக்கு 65 பேர் கொண்டு, மொத்தமாக 14 படகுகள் இவ்வாறாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இவ்வருடம் ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை 35,000 அகதிகள் பிரித்தானியாவைச் சென்றடைந்துள்ளதாகவும், தெரியவந்த தகவல்களின் படி 72 பெர் இவ்வருடத்தில் இதுவரை பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025