Paristamil Navigation Paristamil advert login

 200 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா தகவல்

 200 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா தகவல்

14 மார்கழி 2024 சனி 03:45 | பார்வைகள் : 5057


உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் ஆயுதப் படைகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் 13-12-2024 தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில், உக்ரைன் ஆயுதப்படைகள் 200 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பீரங்கி ஒன்று, பீரங்கிகளை அழிக்கும் வாகனங்கள், 2 கவச வாகனங்கள், 4 கார்கள் மற்றும் 3 மோட்டார்கள் அழிக்கப்பட்டன.

உக்ரைன், குர்ஸ்க் பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை 40,060 க்கும் மேற்பட்ட வீரர்களையும், 236 பீரங்கி டாங்கிகளையும் இழந்துள்ளது"என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்