இலங்கை காலநிலையில் மாற்றம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை

8 மார்கழி 2024 ஞாயிறு 14:30 | பார்வைகள் : 9713
தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி மற்றும் கடல் கப்பல்கள் செல்லும்போது அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை- தமிழக கடற்கரை. அப்பால் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியை எதிர்வரும் 11ம் திகதி அடைய வாய்ப்பு உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அந்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக மணிக்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் அந்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025