மன்னிப்புக் கோரினார் தென்கொரிய ஜனாதிபதி!
7 மார்கழி 2024 சனி 11:28 | பார்வைகள் : 9287
தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் யோல், தம்மை பதவி நீக்கம் செய்வதற்கான வாக்கெடுப்புக்கு முன்னதாக சனிக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் .
நான்கு நாட்களுக்கு முன்னர் நாட்டை அரசியல் குழப்பத்தில் ஆழ்த்திய பின்னர் அவர் பொதுமக்கள் முன் தோன்றுவது இதுவே முதல் முறையாகும்.
நான் உண்மையிலேயே வருந்துகிறேன். அதிர்ச்சியடைந்த மக்களிடம் உண்மையாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்று யூன் கூறினார்.
எனது பதவிக் காலம் உட்பட எதிர்காலத்தில் அரசியல் சூழ்நிலையை ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை எனது கட்சிக்கே விட்டு விடுகிறேன்.
இராணுவச் சட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று வதந்திகள் உள்ளன. நான் தெளிவாகச் சொல்கிறேன். இரண்டாவது இராணுவச் சட்டம் போன்ற எதுவும் இருக்காது என்று யூன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பான தனது சட்டப் பொறுப்பை தட்டிக்கழிக்கப் போவதில்லை என்றும் யூன் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan