Noisy-le-Sec : விஷவாயு தாக்கியதில் இருவர் பலி!!

2 மார்கழி 2024 திங்கள் 16:54 | பார்வைகள் : 6563
விஷவாயு தாக்குதலுக்கு இலக்காகி இருவர் பலியாகியுள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை (நவம்பர் 30) இச்சம்பவம் Noisy-le-Sec (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது.
Rue de la Dhuys வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். இரு ஆண்கள் சுயநினைவை இழந்து கிடந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு - முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இருந்தபோதும் அவர்களை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் monoxyde de carbone விஷவாயு தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்டிடத்தில் வசித்த 20 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025