பொய்களை பரப்புகிறார் ராகுல்; தேர்தல் ஆணையத்தில் பா.ஜ., புகார்
12 கார்த்திகை 2024 செவ்வாய் 03:18 | பார்வைகள் : 9654
பொதுக்கூட்டங்களில் பொய்களை ராகுல் பரப்புகிறார். அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.
மஹா., மற்றும் ஜார்க்கண்டில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், தவறான தகவல்களை பரப்புவதாகவும், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் கூறியதாக, பா.ஜ., தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தலைமையிலான பா.ஜ., குழுவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் மனுவில், ' அரசியலமைப்பு சட்டத்தை நசுக்க பா.ஜ., விரும்புகிறது என ராகுல் பொய் சொல்கிறார்.
பா.ஜ.,வின் கொள்கைகள் குறித்து தவறாக பேசும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் பொய்களை பரப்புவதை கண்டிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan