இரு வேறு தாக்குதல்களில் - ஒருவர் பலி, ஒருவர் காயம்!!

3 கார்த்திகை 2024 ஞாயிறு 09:33 | பார்வைகள் : 8745
அடுத்தடுத்து இடம்பெற்ற இது வேறு தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நவம்பர் 2 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4 மணி அளவில் இச்சம்பவம் Rennes நகரில் இடம்பெற்றுள்ளது. Rennes மாவட்டத்தின் மேற்கு பகுதியான Pontchaillou பகுதியில் முதலாவது தாக்குதல் இடம்பெற்றது. இளம் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இடம்பெற்று சிலமணிநேரங்கள் கழித்து, அதே பகுதியில் மற்றுமொரு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இதில் 29 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளார்.
இரு சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025