காசாவின் மத்திய பகுதியின் மீது இஸ்ரேல் தாக்குதல் - 90க்கும் அதிகமானவர்கள் பலி

30 ஐப்பசி 2024 புதன் 15:47 | பார்வைகள் : 8950
காசாவின் மத்திய பகுதியில் உள்ள பெய்ட் லகியா நகரில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல்போயுள்ளனர் என ஹமாசின் மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
ஐந்து மாடிக்கட்டிடமொன்றே தாக்கப்ட்டதாக மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர் . தரையில் துணியால் போர்த்தப்பட்ட உடல்களின் படங்கள் சமூக ஊடக ங்களில் வெளியாகியுள்ளன.
தனது மருத்துவமனையில் சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஜபாலியாவில் உள்ள கமால் அட்வான் மருத்துவமனையின் இயக்குநர் குசாம் அபு சைபா தெரிவித்துள்ளார்.
போதிய மருந்துகள் இன்மையால் தனது மருத்துவமனை சிகிச்சை அளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025