Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் மகனை கொலை செய்துவிட்டு தந்தை தப்பியோட்டம் 

கொழும்பில் மகனை கொலை செய்துவிட்டு தந்தை தப்பியோட்டம் 

12 புரட்டாசி 2024 வியாழன் 10:53 | பார்வைகள் : 5487


கல்கிஸ்ஸை ,பொருபன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தந்தையொருவர் கூரிய ஆயுதத்தால் மகனைத் தாக்கி கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

இரத்மலானை பொருபன பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய மகனே கொலை செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் மேலும் தெரியவருவதாவது, குடும்பத் தகராறு காரணமாக சந்தேக நபரான தந்தை தனது மனைவி மற்றும் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த மனைவி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்