முதல் முறையாக கார்த்திக் சுப்புராஜ் உடன் இணையும் ஜெயம் ரவி
10 புரட்டாசி 2024 செவ்வாய் 14:18 | பார்வைகள் : 8544
நடிகர் ஜெயம் ரவி தற்போது மூன்று திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த திரைப்படத்தை இயக்குவது பிரபல இயக்குனர் என்ற தகவல் கசிந்துள்ளதை அடுத்து அந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி தற்போது எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’பிரதர்’ புவனேஸ் அர்ஜூனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெனி’ மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் ’காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜெயம் ரவி அடுத்த படத்தை இயக்க இருப்பது பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்று கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் தற்போது சூர்யா நடித்து வரும் 44 வது படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் ஜெயம் ரவி படத்தை இயக்குவார் என்றும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்த பேனரில் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதல் முறையாக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஜெயம் ரவி இணையும் நிலையில் இந்த படம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளதாக கோலிவுட் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan