'சூர்யா 44' படம் குறித்த ஆச்சரிய தகவல்..!

7 ஐப்பசி 2024 திங்கள் 06:28 | பார்வைகள் : 5816
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம், கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தனது அடுத்த படம் ’சூர்யா 44’ என அறிவித்தார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் தொடங்கியது, அதன் பின்னர் ஊட்டி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜூன் மாதம் தொடங்கி, அக்டோபர் முதல் வாரத்திலேயே, சுமார் நான்கு மாத காலத்திலேயே, படப்பிடிப்பு நிறைவடைந்தது. விரைவில் தொழில்நுட்ப பணிகளும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜெயராம், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். நடிகை ஸ்ரேயா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து தயாரிக்கின்றனர்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1