இலங்கையில் பொதுத்தேர்தலுக்கான அச்சடிக்கும் பணி ஆரம்பம்

26 புரட்டாசி 2024 வியாழன் 04:20 | பார்வைகள் : 10963
பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் அச்சிடும் பணி தொடங்கியுள்ளதாக அரச அச்சகர் கங்காணி கல்பனா லியனகே தெரிவித்தார்.
பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான போதிய ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிப்புகள், வர்த்தமானி அறிவித்தல் போன்றவற்றை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 25 மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் ஏற்கப்படுவதால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 25 வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட உள்ளன.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025