ஒலிம்பிக் ஆரம்பித்ததன் பின்னர் Bobigny-இல் பலர் கைது!
9 ஆவணி 2024 வெள்ளி 09:06 | பார்வைகள் : 18940
ஒலிம்பிக் போட்டிகளுக்கு பலத்த பாதுகாப்பு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பும் தீவிரமாக்கப்பட்டுள்ளமை அறிந்ததே. ஒலிம்பிக் ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை 72 பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் Bobigny நகரைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நீதித்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி, ஜூலை 24 ஆம் திகதியில் இருந்து ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை 181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 174 வழக்குகள் குற்றச்செயல்கள் எனவும், 72 பேர் இதுவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்களில் பெரும்பான்மையானோர் 93 ஆம் மாவட்டத்தின் Bobigny நகரைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan