முன்னாள் ஜனாதிபதிகளுடன் இம்மானுவல் மக்ரோன் அவசர சந்திப்பு!!

முன்னாள் ஜனாதிபதிகளுடன் இம்மானுவல் மக்ரோன் அவசர சந்திப்பு!!

1 புரட்டாசி 2024 ஞாயிறு 13:25 | பார்வைகள் : 9858


முன்னாள் ஜனாதிபதிகளான பிரான்சுவா ஒலோந்து மற்றும் நிக்கோலா சர்கோஷி ஆகிய இருவருடன் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அவசர சந்திப்பு ஒன்றில் ஈடுபட உள்ளார்.

நாளை செப்டம்பர் 2 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் இந்த சந்திப்பு எலிசே மாளிகையில் இடம்பெற உள்ளது. நாட்டின் புதிய பிரதமரை அறிவிப்பது தொடர்பில் கலந்துரையாட இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஜனாதிபதிகளுடனான சந்திப்புக்கு முன்னர்,  முன்னாள் பிரதமர் Bernard Cazeneuve இனை எலிசே மாளிகையில் வைத்து சந்திப்பார்  எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து படிக்க