வெர்சாய் மாளிகையில் அவசர வெளியேற்றம்.. தீயணைப்பு படையினர் குவிப்பு..!!

11 ஆனி 2024 செவ்வாய் 14:49 | பார்வைகள் : 8574
இன்று ஜூன் 11, செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெர்சாய் மாளிகை (château de Versailles) அவசரமாக வெளியேற்றப்பட்டது.
பார்வையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டனர். தீ பரவலுக்கான எச்சரிக்கையை விடுக்கப்பட்டதை அடுத்தே இந்த வெளியேற்றம் இடம்பெற்றது. மாளிகையின் கூரை வழியாக புகை எழுந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
அதேவேளை, மாளிகையின் வாசலுக்கு வெளியே ஏராளமான பார்வையாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.