இலங்கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுமி உயிரிழப்பு

28 சித்திரை 2024 ஞாயிறு 14:29 | பார்வைகள் : 5154
அண்மையில் மின்னேரியா, கிரித்தலேயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 17 வயது சிறுமி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சிறுமி படுகாயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மின்னேரிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சிறுமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமியின் முன்னாள் காதலனே துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் செல்லும் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டு அவர் மே 2ம் திகதி வரை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.