துருக்கி அதிவேக வீதியில் பாரிய விபத்து - 10 பேர் பலி
28 வைகாசி 2024 செவ்வாய் 09:37 | பார்வைகள் : 7036
தெற்கு துருக்கியில் அதிவேக வீதியில் பயணிகள் பேருந்து ஒன்று வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 39 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை 26 ஆம் திகதி மெர்சின் மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது.
துருக்கியின் தென்கிழக்கு நகரமான தியார்பாகிரில் இருந்து தெற்கில் உள்ள அதானாவுக்கு 28 பயணித்த அதிசொகுசு பஸ் ஒன்றே விபத்துக்குள்ளானது.
பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது பஸ் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதியதை தொடர்ந்து லொறி ஒன்று மூன்று வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் குறைந்தது எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு நகரமான தியார்பாகிரில் இருந்து நாட்டின் தெற்கில் உள்ள அதானாவுக்குப் பயணித்த பேருந்தில் 28 பயணிகள் இருந்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan