Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரம் அருகே மின்னல் தாக்குதலுக்கு உள்ளான விமானம்!

ஈஃபிள் கோபுரம் அருகே மின்னல் தாக்குதலுக்கு உள்ளான விமானம்!

12 வைகாசி 2024 ஞாயிறு 17:54 | பார்வைகள் : 9033


ஈஃபிள் கோபுரம் அருகே பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஈஃபிள் கோபுரத்தை கண்காணிக்கும் கமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. 

இன்று, மே 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த மின்னர் தாக்குதல் பதிவாகியுள்ளது. ஈஃபிள் கோபுரத்தை மின்னல் தாக்கியது. அதன் புகைப்படம் படம்பிடிக்கப்பட்டதன் பின்னர், அதன் மேல் விமானம் ஒன்று பறப்பதையும், அதன்மேலும் மின்னல் தாக்குதல் பதிவானதும் தெரியவந்துள்ளது. 

இந்த மின்னல் தாக்குதலினால் விமானத்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நன்றி 

Kulik Bertrand

வர்த்தக‌ விளம்பரங்கள்