Paristamil Navigation Paristamil advert login

புயல் : பரிசில் பல்வேறு பூங்கா, கல்லறைகள், புல்வெளிகள் மூடப்படுகின்றன!!

புயல் : பரிசில் பல்வேறு பூங்கா, கல்லறைகள், புல்வெளிகள் மூடப்படுகின்றன!!

28 பங்குனி 2024 வியாழன் 15:13 | பார்வைகள் : 14487


பரிசில் விடுக்கப்பட்டுள்ள புயல் எச்சரிக்கை காரணமாக பூங்காக்கள், கல்லறைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மார்ச் 28 ஆம் திகதி, வியாழக்கிழமை நண்பகலின் 12.30 மணியில் இருந்து இவை மூடப்படுகின்றன.  பரிசில் 70 தொடக்கம் 90 கி.மீ வேகம் வரை புயல் வீசும் எனவும், மர முறிவுகள் மற்றும் மின்னல் தாக்குதல்கள் பதிவாகலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

நெல்சன் புயல் (tempête Nelson) என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் Brest,  tornade போன்ற மாவட்டங்களில் மணிக்கு 180 கி.மீ வேகம் வரை  பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.