Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

இலங்கையில் மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

6 பங்குனி 2024 புதன் 03:29 | பார்வைகள் : 13089


இலங்கையில் நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 50 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தனியாராலும், இலங்கை போக்குவரத்து சபையாலும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பஸ்களிலும் சி.சி.ரி.வி. கெமராக்களை பொருத்துவது கட்டாயமாக்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்