AI போலிகளைத் தடுக்க விதிமுறைகள் வகுக்கப்படும் - அமைச்சர் உறுதி
9 பங்குனி 2024 சனி 08:32 | பார்வைகள் : 8084
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு Deepfake-களைத் தடுக்க விதிமுறைகள் வகுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
Deepfake காணொளிகள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன, அவற்றைத் தடுக்க தகுந்த தீர்வுகளைக் காணுமாறு சமூக ஊடக தளங்களின் பிரதிநிதிகளை கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் Deepfake-கள் பரவுவது சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும், நமது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
தேர்தலுக்கு பின், தேவையான விதிகள் இறுதி செய்யப்பட்டு, தேவைப்பட்டால், புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றார்.
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் Deepfake காணொளிகள் சமூக ஊடகங்களுக்கு சவாலாக உள்ளன.
இவை தேர்தல்களின் போது ஆபத்தான ஆழமான போலிகளுக்கு வழிவகுக்கும் என்று கவலை தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, சமூக வலைதள நிறுவனங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து பேசிய மத்திய அரசு, தவறான தகவல்களை நீக்க உத்தரவிட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan