Paristamil Navigation Paristamil advert login

Mont-Blanc : 24 மணிநேரத்தில் மூன்று மலையேற்றவாதிகள் பலி!!

Mont-Blanc : 24 மணிநேரத்தில் மூன்று மலையேற்றவாதிகள் பலி!!

6 மாசி 2024 செவ்வாய் 11:01 | பார்வைகள் : 9734


கடந்த 24 மணிநேரத்தில் மூன்று மலையேற்றவாதிகள் பலியாகியுள்ளனர். Mont-Blanc மலையில் உள்ள ஆபத்தான பகுதிகளுக்கு ஏறிய மூவரே உயிரிழந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை - திங்கட்கிழமைக்கு உட்பட்ட இரவில் Chamonix பகுதியில் உள்ள மலையில் ஏறிய 23 வயதுடைய ஒருவர் அங்கிருந்து தவறி விழுந்துள்ளார். 500 தொடக்கம் 600 மீற்றர் உயரமான மலையில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் மீட்புப்படையினர் அவரது சடலத்தை மீட்டனர்.

அத்தோடு, Mont Blanc மலையில் ஏறிக்கொண்டிருந்த நாற்பது வயதுகளையுடைய இருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்களது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

24 மணிநேரத்தில் மூன்று மலையேற்றவாதிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்