மீண்டும் வேலைநிறுத்தத்துக்கு தயாராகும் ஆசிரியர்கள்!!

2 மாசி 2024 வெள்ளி 16:13 | பார்வைகள் : 10831
நேற்று பெப்ரவரி 1 ஆம் திகதி ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததை அடுத்து, தற்போது புதிய வேலை நிறுத்தத்துக்கு அவர்கள் தயாராகியுள்ளனர்.
பெப்ரவரி 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. CGT Éduc'action மற்றும் Sud Éducation ஆகி தொழிற்சங்கங்களுடன், பிரதானமாக Snes சங்கமும் இணைந்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளது.
பரிசில் நேற்றைய நாளில் 130 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அதேபோன்ற ஒரு முடக்கம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025