மனித மூளையில் AI Chip., எலான் மஸ்க் வெற்றி!

31 தை 2024 புதன் 07:46 | பார்வைகள் : 5642
எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான Teslaவின் தலைமை நிர்வாக அதிகாரியான Elon Musk தலைமையிலான ஸ்டார்ட்-அப் நிறுவனமான Neuralink மனித மூளையில் Chipபை வெற்றிகரமாக நிறுவியுள்ளது.
மனித மூளைக்கும் கணினிக்கும் இடையே நேரடி தொடர்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, neurotechnology நிறுவனமான Neuralink 2016-இல் நிறுவப்பட்டது.
மனித ஆற்றலை வலுப்படுத்துவதும், Parkinson போன்ற நோய்களைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும்.
இது கூடுதலாக, மனித மூளையில் பொருத்தப்பட்ட சிப் மனிதனுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் (Artificial Intelligence) இடையிலான குறியீட்டு இணைப்பை வலுப்படுத்தப் பயன்படுகிறது.
குறித்த மனிதனின் மூளையில் சிப் பொருத்தினோம். நோயாளி படிப்படியாக குணமடைந்து வருகிறார்' என எலோன் மஸ்க் தனது X கணக்கில் பதிவிட்டுள்ளார். அதன் ஆரம்ப முடிவுகளில் neuron spike detection கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) கடந்த ஆண்டு மே மாதம் மனித மூளையில் சிப் பொருத்துவதற்கு ஒப்புதல் அளித்தது.
மூளை இயந்திரம் அல்லது நியூராலிங்க் மூளை கணினி இடைமுகம் 8 மிமீ விட்டம் கொண்ட சிப்பில் மெல்லிய மின்முனைகளைக் கொண்டுள்ளது.
இந்த சிப் முடியின் தடிமனில் 20 சதவீதம் மட்டுமே. மண்டை ஓட்டின் ஒரு பகுதி அகற்றப்பட்டு அது நிறுவப்பட்டுள்ளது. பின்னர் மெல்லிய மின்முனைகள் மூளையின் முக்கிய பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
மூளையில் உள்ள மின்முனைகள் மூளைக்கு சமிக்ஞைகளை எடுத்துச் செல்கின்றன. மூளைக்கு மின் சமிக்ஞைகளை அனுப்புகிறது மற்றும் பெறுகிறது. இது அந்த மின் சமிக்ஞைகளை கணினிகள் பகுப்பாய்வு செய்யும் அல்காரிதம்களாக மாற்றுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025