விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு நடுவே ஸ்வீடன் பயணமாகியுள்ள ஜனாதிபதி மக்ரோன்!!
30 தை 2024 செவ்வாய் 07:52 | பார்வைகள் : 10438
விவசாயிகள் போராட்டத்தை பிரதமர் கேப்ரியல் அத்தாலிடம் ஒப்படைத்துவிட்டு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஸ்வீடனுக்கு பயணமாகியுள்ளார்.
ஸ்வீடனில் இரண்டு நாட்கள் அவர் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருப்பார் என அறிய முடிகிறது. ஸ்வீடன் மிக விரைவில் NATO அமைப்பில் இணைந்துகொள்ள உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னதாகவே ஸ்வீடன் NATO வில் இணைந்திருக்க வேண்டிய சந்தர்ப்பம் இருந்தும், இரஷ்ய-உக்ரேன் யுத்தத்தினால் அந்த அது தள்ளிப்போயிருந்தது.
இந்நிலையில், ஸ்வீனை NATO சார்பு நாடுகள் பட்டியலில் இணைக்கும் முயற்சியின் ஜனாதிபதி மக்ரோன் ஈடுபட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாகவே அவர் ஸ்வீடனுக்கு பயணமாகியுள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan