Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் - பெரும் பாதுகாப்புச் சவால்!!

ஒலிம்பிக் - பெரும் பாதுகாப்புச் சவால்!!

23 தை 2024 செவ்வாய் 17:27 | பார்வைகள் : 12559


இன்னமும் ஆறு மாதங்கள் மட்டுமே பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளிற்கு இருக்கும் நிலையில் பல போராட்டங்களும் சாலை மறியல்களும் நடாத்தப்படுவது அரசை நிலைகுலைய வைத்துள்ளது.

அதே நேரத்தில் ஒலிம்பிக் போட்டிகளின்போது, மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

«பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் சவால்கள் நிறைந்த நிலையில், ஜோந்தார்ரமினர், காவற்துறையினர் என 30.000 பேர் அன்றாடக் கடமையில் ஈடுபடுவார்கள்»

«இத்துடன் 15.000 இராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவதுடன்,  22.000 தனியார் பாதுகாப்புக் காவலர்களும் பாதுகாப்புக் கடமையில் நியமிக்கப்படுவார்கள்»

எனவும் ஒலிம்பிக் விளையாட்டு ஏற்பாட்டுக் குழவினருடனான சந்திப்பில் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.