யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதன் டோமினிக் அவர்கள் 29-06-2016 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன், இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், அருளப்பு சின்னமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும், பவாணி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற லதா, இராசரெட்ணம்(மனோ), அல்பேட்(ரவி- நெதர்லாந்து), பெனடிற்(சேகர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், நோபேட், றூபி, ரமா, சறோ, அன்ரன், யசிந்தா, லீலா, பிறேமா, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் திருவுடல் 11-07-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் ந.ப 12:00 மணியளவில் Ander Stadt hof Bergstraat எனும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |