யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், மருதங்கேணியை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் வேலுப்பிள்ளை அவர்கள் 28-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ர புதல்வரும், தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவானந்தம், சிவராஜா, மல்லிகாதேவி(கலா), சிவசோதி, சுமதி, சிவாகரன், சிவரூபன், சிவதர்ஷினி, சுதாகர்(அசோக்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவாஜினி, மினி, சின்னத்தம்பி, பிரியா, செல்வம், ரூபா, ரூபி, விஜி, றாஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிதம்பரப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, சின்னக்கிளி, சிவக்கொழுந்து(இலங்கை), சீதை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் 01-04-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
முகவரி:
11 Rue Delescluze, 93000 Bobigny, France
நிகழ்வுகள்
தகனம்
Tuesday, 02 Apr 2019 11:00 AM - 12:00 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
|