Make as your home page  "P!" EN FRANCAIS - IN FRENCH
 paristamil
PARISTAMIL.FR  |  CINEMA  |  ANNONCES  |  CHAT  |  JEUX  |  ADVERTISE WITH US
முகப்பு இலங்கை பிரான்ஸ் இந்தியா வினோதம் உலகம் சினிமா விளையாட்டு தொடர்புகளுக்கு
  விளம்பரத் தொடர்புக்கு
France +33 970 466 866
  விளம்பரம்
  மின்னஞ்சலில்
  Follow us on Facebook
  விளம்பரம்
பிணவாடை அடிக்கிறது
June 15, 2012, 5:01 pm|views: 5115

 

ஒரு நைல் நதியாய்
வடிந்து கொண்டு
ஓடியது குருதி
கொலைக் களத்திலிருந்து

கறுப்பு மனிதர்களால்
அரைப் பிணங்களாய்
தெருவெங்கும் விரவி
பிச்சை கேட்கின்றது
எம் உயிர்கள்!

ஒவ்வொரு நாளும்
மலர்களுக்கு பதிலாக
மரணம் மலர்ந்தது !
மரணம் மரணம்
மரணமென்றானது - என்
மண்ணின் தேசிய கீதம்

அதிகாலையிலும்
ஐயோ ஐயோ ஐயோவென
சுப்ரவாதம் ஒலிக்கவே
ஊரடங்கு போட்டன
ஓல ஒப்பாரிகள்!

பிறந்த நாளுக்கு
இனிப்பு வழங்கி
சிரித்து சென்ற
என் பள்ளித் தோழி
பாவடையின்றி
செத்துக் கிடந்தாள்!

பாவம் அவள்
குருதி தோய்ந்த
வெள்ளை ரோஜாவாய்
உதிர்ந்து கிடந்தாள். 
அவள் குறிகளில்
பரிசோதனை
செய்யப்பட்டிருந்தது
சப்பாத்துக்காரனின் ஆண்மை !

அத்தனையும் யாரோ ஒரு
நடிகையின் எண்ணத்தில்
பார்த்தும் ரசித்தும்
கொடி பிடித்தும்
உண்ணாநிலையிருந்தும்
பேசிய கர கர குரல்கள்
பழரசம் அருந்திய நாடகம்
அறிந்தோம் !

எங்கள் கண்ணீரின் கனத்திலே
கதிரைகள் செய்யப்படுகின்றன
அரசியல் அரங்கில் !

நரிகளின் நாடகத்தில்
தமிழனின்
சாவு மூலக் கதை!
முள்ளிவாய்க்கால் தமிழனின்
சவப்பெட்டிகளை
வாக்குபெட்டியாய்
மாற்றுகிறீர்கள்
மானம் கெட்டவரே !

பிணவாடை அடிக்கிறது
என் கவிதைகளிலும்
முள்ளிவாய்க்கால் இருப்பதனால்!
முகருங்கள்
மானம் கெட்டவரே
இனியேனும்
பழரசம் அருந்த ரத்தம் கேட்காதீர்!

- கவிஞர் அகரமுதல்வன்

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
Kovil
• உங்கள் கருத்துப் பகுதி
 முன்னைய செய்திகள்
என் விம்மல்...!
மனதுள் போராட்டம் மகிழ்வில்லா வாழ்க்கை..! மாசுபட்ட உள்ளங்கள் நடுவே மாறிடா என் உள்ளம்..! மின்மினியாய் வந்து செல்லும் சில சந்தோஷங்கள் மீண்டும் கிடைக்குமா? மீண்டிட தான் முடிந்திடுமா?
April 30, 2013, 8:43 am | views: 1902மேலும் »
வெம்புலி பெற்ற அம்புலி: கவிஞர் வாலி
கன்னியாகுமரியிலிருந்து கைதட்டிக் கூப்பிட்டால், ஏனென்று கேட்கும் தூரத்தில்தான் ஈழம் இருக்கிறது ; தொப்புழ்கொடி என்று நாம் கொண்டாடும்படி - இங்கிருக்கும் சோழத்தமிழன்தான் அங்கிருக்கும்
April 26, 2013, 11:37 am | views: 2523மேலும் »
ஏனடி பெண்ணே...!
ஏனடி பெண்ணே உன் கால்கள் தடம் மாறுது உன் ஜீவன் எப்போதுமே என்னோடு உறவாடுது (ஏனடி பெண்ணே ....) முதல் பார்வை நீயும் தந்து என் மனசில் வந்தாயே முதல் பாவை நானு
April 19, 2013, 6:39 am | views: 1866மேலும் »
பிறந்திருப்பேன் உனக்காக ....
நித்தமும் மனதில் எத்தனை போராட்டம் இத்தனை காலம் வரை குறையாத மனத் துயரம் சுகமான சுமையாக தொடர்ந்து நடக்கின்றேன் . விரும்புகிறேன் அனுதினமும் சொல்வதற்கு உன்னிடம் புரியவேண்டும் என் ம
April 2, 2013, 12:48 pm | views: 2622மேலும் »
ஈழத்தின் ஒரு மாணவன் குரல் ..
எந்த அரசியல் வாதியையும் நாம் முழுமையாய் நம்பவில்லை அவர்கள் பேச்சிலும் அதிகம் அக்கறை இல்லை .. பத்திரிக்கை பார்த்த போது மெய்சிலிர்த்தது .. முக நூல் பார்த்த போது அகம் மலர்ந்தது.. எ
March 18, 2013, 11:38 am | views: 4152மேலும் »
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2013
18
சனிக்கிழமை
மே
திருவள்ளுவர் ஆண்டு 2044
ஸ்ரீ விஜய ஆண்டு 
வைகாசி
4
ஹிஜ்ரி ஆண்டு 1434
ரஜப் رجب 8
திதி: அஷ்டமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
paristamil
  விளம்பரம்
  TV நிகழ்ச்சிகள்
புதுவரவு  17-05-2013 23:30:56
karthigai pengal
புதுவரவு  17-05-2013 23:29:39
Saravanan Meenatchi
  பரிஸ்தமிழ் வழிகாட்டி
Actif assurance
Advertisements Copyright © 2000 - 2013 ParisTamil