Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் ஒத்திகை பிற்போடப்பட்டது!

ஒலிம்பிக் ஒத்திகை பிற்போடப்பட்டது!

3 சித்திரை 2024 புதன் 11:13 | பார்வைகள் : 3076


சென் நதியில் ஏப்ரல் 8 ஆம் திகதி அன்று ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வுக்கான ஒத்திகை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது பிற்போடப்பட்டுள்ளது.

வெள்ளம் காரணமாக சென் நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், அதன்காரணமாகவே ஒத்திகை பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏப்ரல் 8 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த இந்த ஒத்திகை தற்போது மே 27 ஆம் திகதி இடம்பெற உள்ளது.

ஆரம்ப நிகழ்வுக்கான ஒத்திகை மட்டுமே பிற்போடப்பட்டுள்ளதாகவும், ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒத்திகை திட்டமிட்டபடி ஜூலை மாதத்தில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 26 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்