Paristamil Navigation Paristamil advert login

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து ... மகன்கள் யாரிடம்?

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து ...  மகன்கள் யாரிடம்?

16 சித்திரை 2024 செவ்வாய் 08:06 | பார்வைகள் : 640


தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக அவர்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டப்படி விவாகரத்து செய்வதற்காக மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நேற்று நீதிபதி சுபாதேவி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட அவர், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அக்டோபர் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை அடுத்து அக்டோபர் 7ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து இருக்கும் நிலையில் அவர்களை சேர்த்து வைக்க ரஜினி மற்றும் கஸ்தூரிராஜா தரப்பில் இருந்தும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தரப்பிலிருந்தும் தீவிர முயற்சி செய்யப்பட்டதாகவும் ஆனால் அது எதுவுமே பலிக்காத காரணத்தினால் தற்போது இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விவாகரத்துப் பெற்ற பின்பு மகன்களை ஐஸ்வர்யா பொறுப்பில் வளர்க்க வேண்டும் என முடிவு செய்துள்ளார் தனுஷ். மகன்களை விட்டுக் கொடுப்பதோடு சொத்திலும் எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக முடிக்க வேண்டும் என்பதே இருவரின் விருப்பமாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்