Paristamil Navigation Paristamil advert login

யாழில் மீண்டும் கொரோனா மரணம் பதிவு - பிரான்ஸில் இருந்து சென்ற பெண் மரணம்

யாழில் மீண்டும் கொரோனா மரணம் பதிவு - பிரான்ஸில் இருந்து சென்ற பெண் மரணம்

15 சித்திரை 2024 திங்கள் 12:33 | பார்வைகள் : 972


நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ தொற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்ற 62 வயதான பெண்ணே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனையடுத்து சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (12) உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்